தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!

சிங்கப்பூரில் மீன்வளத் துறைமுக சாலையில் உள்ள இரண்டு மாடி தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நடந்தது.இரண்டு மாடி கொண்ட தொழிற்சாலை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறுவதை சீனா மொழி நாளிதழான Lianhe Zaobao பகிர்ந்துள்ள வீடியோவில் காணலாம்.

தீ விபத்து நடந்த தினத்தன்று காலை சுமார் 10.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

SCDF சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே 40 பேர் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் போது தீயணைப்பாளர் ஒருவர் மயக்கம் அடைந்தார்.அவரை Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.