Singapore News in Tamil

Keppel Offshore & Marine நிறுவனத்தின் ஊழல் விவகாரம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தில் Keppel Offshore & Marine ஊழல் விவகாரத்தை பற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பிரதமர் அலுவலக அமைச்சர் விளக்கம் தந்தார்.

Keppel Offshore & Marine நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் ஆறு பேர் பிரேசிலில் உள்ள வெளிநாட்டு ஆலோசகர்களுக்கு 72 மில்லியன் வெள்ளி கையூட்டு வழங்கியதாக கூறப்பட்டது. அது குறித்து விசாரணையும் நடைபெற்றது.

ஊழல் விவகாரத்தில் வெளிநாட்டு தரப்பிலிருந்து போதுமான பயனுள்ள தகவல்களை பெற முடியவில்லை.

இதனால் விசாரணைக்கு தடையாக இருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறினார்.

பிரேசிலுக்கு லஞ்ச ஒழிப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைத் தொடர்பாக பலமுறை சென்றனர். புலனாய்வு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது.

இது சிக்கலான விவகாரம். ஊழலில் ஈடுபட்டவர்களை விட்டுவிடவில்லை. நீதிமன்றத்தில் சமர்பித்து குற்றம் சாட்டும் அளவிற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

வெளிநாடு அனுமதித்தால் மட்டுமே சிங்கப்பூர் சட்டத்தை அங்கு பயன்படுத்த முடியும். ஆனால், வெளிநாடு அனுமதிக்காத பட்சத்தில் அங்கு சிங்கப்பூர் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறினார். ஊழல் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது ஏன்? என்றும் அவர் விளக்கம் அளித்தார்.