சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் கண்டறியப்பட்ட இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு!!

அங் மோ கியோவில் உள்ள கட்டுமான தளத்தில் இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான தளத்தில் இருந்து பாதுகாப்பாக வெடிகுண்டு அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

இது குறித்து ஜூன் 28-ஆம் தேதி மாலை 5.45 மணியளவில் காவல்துறைக்கு புகார் வந்ததாக 8World செய்தியில் வெளியிட்டுள்ளது.

அது அங் மோ கியோ அவென்யூ 1 இல் இருந்து மேரிமவுண்ட் ரோட்டுக்கு செல்லும் வழியில் உள்ள கட்டுமான தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஆகாய வழியாக சிங்கப்பூருக்குள் போடப்பட்டது.

அதை அகற்ற அகற்றும் குழுவுடன் சேர்ந்து காவல்துறை பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு அகற்றப்பட்டு விட்டது, இனி பொதுமக்கள் பயப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டது.