பூனையை சித்ரவதை செய்து தோலை உரித்து அதை வீடியோ எடுத்த நபர்!!

பூனையை சித்ரவதை செய்து தோலை உரித்து அதை வீடியோ எடுத்த நபர்!!

33 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் பூனையின் தோலை உரிக்கும் வீடியோ வைரலானது.

அதன் தொடர்பாக அவரை மலேசியாவில் காவல்துறை கைது செய்தனர்.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மாவட்ட காவல்துறை இச்சம்பவம் குறித்து முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இது குறித்து புகார் வந்தவுடன் ஜூன் 25 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

47 வினாடிகள் கொண்ட வீடியோ வாட்ஸாப்பில் காவல்துறைக்கு வந்தது.

அதில் நபர் ஒருவர் வெள்ளை பூனையை வெட்டுவது போல் தெரிந்தது. பூனையின் ரோமத்தின் ஒரு பகுதி ரத்தத்தால் மெலிந்த நிலையில் தரையில் கிடந்தது.

சந்தேக நபரிடமிருந்த மொபைலை காவல்துறை பறிமுதல் செய்தனர்.

அந்த நபரிடம் மிருகுவதை தொடர்பான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 428 கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்,அபராதமும் விதிக்கப்படும். அந்த நபர் சிலாங்கூரிலுள்ள சிற்றுண்டி கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்ததாகவும், அவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.