கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…?

கோடியில் புரளும் மலையாள நடிகர்... சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா...?

நடிகர் மோகன்லால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர். இந்திய திரைப்பட நடிகராகவும் ,திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தவர்.இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பை கௌரவித்து 2009 இல் பிராந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் பதவியை பெற்று இவர் இந்தியாவின் முதல் நடிகர் ஆனார்.

மேலும் இவர் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமான விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையையும் நிறுவினார். இது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு ஏற்ற திட்டங்களை வழி வகுக்கும் அமைப்பாகும்.

2013இல் மலையாளத்தில் லோக்பால் என்ற விழிப்புணர்வு திரில்லர் படத்தில் நடித்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தொடர்ந்து மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது சம்பளமாக ரூ.10 கோடி முதல் ரூ.17 கோடி வரை பெறுகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் வெப் சீரியல்களில் நடிப்பதற்காக ஒரு எபிசோடுக்கு ரூ.65 லட்சம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு சென்னை மற்றும் கேரளாவில் பிரம்மாண்ட வீடுகள் உள்ளது.

தற்போது அவரது சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.410 கோடி என கூறப்படுகிறது. துபாயில் ரூ.25 கோடி மதிப்புள்ள வீடும், பல சொகுசு கார்களையும் வைத்துள்ளதாக தகவல் பரவி உள்ளது.