உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!!

உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!! விமானிக்கு குவியும் பாராட்டு!!

மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான MH 199 இந்தியாவின் ஹைதராபாத்திலிருந்து மலேசியா நோக்கி சென்று கொண்டிருந்தது.

புறப்பட்ட சில நிமிடங்களிலே அதன் என்ஜினில் தீப்பற்றியது.

அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக புறப்பட்ட இடத்திற்கே திருப்பிவிடப்பட்டது.

அதில் 130 பயணிகள் இருந்தனர்.

புறப்பட்ட 15 நிமிடத்திலேயே அதன் வலதுப்பக்க என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விமானி பயணிகள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் பிறகு அவசரமாக தரையிறக்குவதற்கு அனுமதி கோரினார்.

ஹைதெராபாத் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உதவியோடு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

என்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதை உடனடியாக கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் விமானி அனைவராலும் பாராட்டப்பட்டார்.

இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

எதனால் தீப்பொறி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.