சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலால் நடந்தே பாலத்தைக் கடந்த மக்கள்!!

சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவலால் நடந்தே பாலத்தைக் கடந்த மக்கள்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 3 நாள் நீண்ட வார விடுமுறை ஜூன் 17- ஆம் தேதியோடு முடிவடைந்தது.

இதனால் பரபரப்பான ஜொகூர், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வழக்கம் போல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

எனினும், இந்த முறை “jb/sg custom human traffic” டெலிகிராம் குரூப்பில் பேருந்துகளுக்காக பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒருவர் வரிசை எங்கிருந்து தொடங்குகிறது என்றே தெரியவில்லை என்று கூறினார்.

இந்தச் செய்தியானது சில நொடிகளில் அனைவருக்கும் பரவ பேருந்தை நம்பினால் சரிப்பட்டு வராது என எண்ணி பலர் நடந்தே பாலத்தை கடக்க துவங்கினர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடிக்கு ஜொகூர் சோதனைச் சாவடியிலிருந்து
நடந்து செல்ல சுமார் 20 நிமிடங்கள் ஆனது என்று சிலர் சொன்னார்கள்.

மழை பெய்யாததாலும் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்ததாலும் நடப்பதற்கு சுலபமாக இருந்ததாக ஒருவர் கூறினார்.