ஒரு வருடங்களுக்கு மேலாக பிக்பாக்கெட் அடித்து டிமிக்கி காமித்த மூதாட்டி!!

ஒரு வருடங்களுக்கு மேலாக பிக்பாக்கெட் அடித்து டிமிக்கி காமித்த மூதாட்டி!!

சிங்கப்பூரில் யிஷுனில் உள்ள சோங் பாங் சந்தையில் பிக்பாக்கெட் செய்ததாக சனிக்கிழமை 70 வயதுடைய மூதாட்டியை காவல்துறை கைது செய்துள்ளது.

யிஷுன் ரிங் ரோடு பகுதியில் ஜூலை 24,2023 க்கும் ஜூன் 13 2024க்கும் இடையே வாலட்கள் காணாமல் போனதாக பல புகார்கள் வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து சனிக்கிழமை காவல்துறை கைது செய்தது.

அந்த மூதாட்டி திருடிய வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து விட்டு சந்தைக்கு அருகே வீசி செல்வார்.

மேலும் இதே போன்ற மற்ற குற்றச் செயல்களிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகளுக்கு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.அல்லது அபராதம் விதிக்கப்படும். அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.