ஊழல் நடவடிக்கை ஈடுபட்டதாக கடல் பொறியியல் நிறுவனம் மீது விசாரணை!!

ஊழல் நடவடிக்கை ஈடுபட்டதாக கடல் பொறியியல் நிறுவனம் மீது விசாரணை!!

கடல் பொறியியல் நிறுவனமான Seatrium மீது சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அது பிரேசிலில் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொள்கிறது.

Seatrium நிறுவனத்திடம் இருந்து சிங்கப்பூர் நாணய வாரியமும், வர்த்தக புலனாய்வுப் பிரிவும் இந்த ஊழல் குறித்த மேல் தகவல்களைத் தெரிந்து கொள்ள அது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிரேசிலில் நடந்த “Operation Car Wash” லஞ்ச ஊழல் வழக்குடன் இந்நிறுவனத்துக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக கூறியது.

மேலும் அந்நிறுவனம் விசாரணைக்கு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியது.மேலும் விவரங்கள் கிடைக்கும் போது நாங்கள் அறிக்கை வெளியிடுவோம் என்றும் அது கூறியது.