மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை!!அவர் நிஜத்திலும் இப்படிதான்!!

மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை!!அவர் நிஜத்திலும் இப்படிதான்!!

மருமகன் என்பதற்காக நான் இப்படிச் சொல்லவில்லை… அவர் நிஜத்திலும் இப்படிதான்…

சென்னை: அண்மையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும்,குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.தனது மகள் ஐஸ்வர்யா திருமணம் ஆகி சென்றுள்ள தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பான குடும்பம் என்று நடிகர் அர்ஜுன் கூறியுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்து கொண்ட போது உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து சென்னையில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து கடந்த ஆண்டு நிச்சயம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்களின் திருமணம் ஜூன் 11 அன்று ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்றது. இதில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை அடுத்து ஐஸ்வர்யா- உமாபதி ஜோடிக்கு சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்களும், நடிகர்களும்,நடிகைகளும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

செய்தியாளர்கள் முன்னிலையில் நடந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அர்ஜூன்,தம்பி ராமையா, உமாபதி மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தம்பி ராமையா, ஐஸ்வர்யா தங்கள் குடும்பத்திற்கு மருமகளாக வந்தாலும் அவர் எங்களுக்கு மகள் தான். அதுமட்டுமின்றி தனது மருமகள் தாயாக இந்த குடும்பத்தை வழி நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.அதோடு மகளின் திருமணத்திற்கு மருமகனைத் தேர்ந்தெடுக்கும் பணியையும் மகனுக்குக் கொடுத்தார். அதேபோல், அவரது வாழ்க்கையும் அவராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார் தம்பி ராமையா.

மேலும் நடிகர் தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாட்டு குடும்பம் என்றும் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தபோது நிகழ்ச்சியில் உமாபதி ஒரு போட்டியாளராக இருந்தார். அவர் மிகவும் திறமையானவர், கண்ணியமானவர், அமைதியானவர் மற்றும் நகைச்சுவையானவர் என்று கூறினார்.

அப்போது உமாபதி தான் மருமகனாக வருவார் என்று தெரியாது. அப்போது இரண்டாவது மகள்,ஐஸ்வர்யா உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். எனக்கு அப்போது தெரியும். அது காதல் விஷயமாக இருக்கும் என்று! தான் காதலிப்பதாக கூறினார். அந்த பையன் யார் என்று கேட்டேன் உமாபதி என்று கூற நானும் சரி என்றேன்.

மேலும் உமாபதி ஒரு திறமைசாலி, விரைவில் நீங்கள் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அவரை பார்ப்பீர்கள், என் மருமகன் என்று நான் சொல்லவில்லை. அவர் உண்மையிலேயே திறமையானவர் என்று கூறினார். அதேபோல, மணமக்களுக்கு அனைவரின் அன்பும், வாழ்த்துக்களும் தேவை என்று கூறினர்.