கிராஞ்சி MRT சேவை தடங்களுக்கு இதுதான் காரணமா…?

கிராஞ்சி MRT சேவை தடங்களுக்கு இதுதான் காரணமா...?

சிங்கப்பூர்: இந்த மாதம் மூன்றாம் தேதி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வடக்கு-தெற்கு MRT சேவை தடைபட்டது குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் விளக்கமளித்துள்ளது.

மின்னல் தாக்கும் போது அதிகப்படியான ஆற்றலைக் கட்டுப்படுத்தும் சாதனம் சரியாக வேலை செய்யாத காரணத்தால் மின்தடை ஏற்பட்டதாக அது கூறியது.

மின்கட்டுப்பாட்டுப் பெட்டியில் உள்ள சாதனம் பகலில் சேதமடைந்ததாகவும், மின்னல் தாக்கியபோது அது செயல்படவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆற்றல் கட்டுப்பாட்டு சாதனங்கள் எத்தனை காலத்திற்கு ஒருமுறை சோதிக்கப்பட வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்ய SMRT உடன் இணைந்து செயல்படுவதாக அது கூறியது.

இம்மாதம் மூன்றாம் தேதி மாலை 6 மணியளவில் கிராஞ்சி நிலையம் அருகே சேதம் ஏற்பட்டது.

சுவா சு காங் மற்றும் உட்லண்ட்ஸ் இடையேயான ரயில் சேவைகள் மக்கள் பயணிக்கும் பரபரப்பான நேரத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தடைபட்டன.