பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!!

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சண்டையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 23 முதல் 31 வயதுக்குட்பட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நேற்று (ஜூன் 14) அதிகாலை 3.05 மணியளவில் ரஃபேல்ஸ் இணைப்புச் சாலையில் சண்டை நடப்பதாக போலீஸாருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ​​2 குழுக்களும் ஒருவரையொருவர் சத்தமாக வாய் தகறாரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மேலும் 5 பேர் கைகலப்பிலும் ஈடுபட்டதாக தெரிகிறது.

காவல்துறை அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டனர்.

பின்னர் கலவரத்தை தடுக்கும் வகையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

பொது இடங்களில் சண்டையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர்கள் மீது இன்று (ஜூன் 15) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.