ஒரு வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! 15 வயது சிறுமி உட்பட 71 பேர் சிக்கியது எப்படி?

ஒரு வாரம் நடத்தப்பட்ட அதிரடி சோதனை!! 15 வயது சிறுமி உட்பட 71 பேர் சிக்கியது எப்படி?

சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 15 வயது சிறுமி உட்பட 71 பேர் சிக்கி உள்ளனர்.அவர்கள் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த சோதனை நடவடிக்கையானது இந்த வாரம் முழுவதும் நடந்தது.

தீவின் அங் மோ கியோ,பிடோக் பாத்தோக், தோ பாயோ உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனைகள் நடந்தது.

இந்த அதிரடி சோதனையில் சுமார் 115,000 வெள்ளி மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கைதான 15 வயது சிறுமி போதைப்பொருள் உட்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும், உயர்நிலை மூன்றில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.