நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..?

நயன்தாரா உங்க தாய் பாசத்திற்கு ஒரு அளவே இல்லையா..?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து தொடர்ந்து முன்னணி இடத்தை தக்க வைத்துள்ளார். நடிகரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

நடிகை நயன்தாரா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுடில் நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா நடித்த ‘ஜாவான்’படம் பல கோடி ரூபாய் வசூல் பெற்றது. இதைத் தொடர்ந்து ‘தி பெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நயன்தாரா எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதை தவறவில்லை. திருமணமான பிறகு இருவரும் குழந்தைகளுடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட அவர்கள் சீனா சென்று அவர்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடினர்.

இந்நிலையில் நயன்தாரா குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று பரவி வருகிறது.அதாவது, நடிகை நயன்தாரா சென்னை எழும்பூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தபோது, ​​தனது மகன்களை கீழே அழைத்து வந்து விளையாடுவது வழக்கம். அப்படி ஒருமுறை ஒரு ஆட்டோ டிரைவர் சவாரிக்கு வந்தார்.

அப்போது, ​​குழந்தைகள் விளையாடும் பகுதியில் ஏன் இவ்வளவு வேகமாக வந்தீர்கள் என்று நயன்தாரா அவரிடம் சண்டை போட்டுள்ளார். அதேபோல், ஒருமுறை உணவு விநியோகம் செய்ய வந்த நபர் ஒருவர் டெலிவரி செய்பவரிடம் சத்தமாக போனில் பேசிக் கொண்டிருந்தார். ஏன் இப்படி சத்தமாக பேசுகிறாய், குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கின்றனர் என்று கூறி அவரிடம் சண்டை போட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், நயன்தாரா தாய்பாசத்தில்
இப்படியெல்லாம் செய்து வருகிறார் என்று ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் சிலர் இது ரொம்ப ஓவர் போல சில எதிர்மறையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது நடிகை நயன்தாரா போயஸ் கார்டனில் பிரமாண்ட பங்களா கட்டி குடியேறியுள்ளார்.அபார்ட்மெண்டில் அடிக்கடி நடக்கும் இதுபோன்ற சண்டைகளால் தான் நடிகை நயன்தாரா அந்த குடியிருப்பை காலி செய்திருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.