கார் பார்க்கிங்கில் அடுத்தடுத்து மோதி கொண்ட கார்கள்!!

கார் பார்க்கிங்கில் அடுத்தடுத்து மோதி கொண்ட கார்கள்!!

சிங்கப்பூர்: பிஷான்- அங் மோ கியோ பூங்காவின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய கார் சரியான நேரத்தில் நிற்காததால் 4 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதின.

பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை டிரைவர் வெளியே எடுக்க முயன்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காருடன் மோதியதில் அடுத்தடுத்து நான்கு கார்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

கார் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காரிலிருந்த 89 வயது முதியவரான ஓட்டுநர் மற்றும் 90 வயதான பயணி ஆகியோர் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விபத்தானது ஜூன் 8 காலை 7.45 மணியளவில் நடந்தது என்று காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக 8 world செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் சரிவில் சிக்கியுள்ளது.

இதனை இணையத்தில் பரவி வரும் காணொளியில் காணலாம்.

விபத்தை ஏற்படுத்திய 89 வயதான சாரதி என்பவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக கூறினார்.