சிங்கப்பூரில் அதிகரிக்கும் முன்பதிவு!! ஹோட்டல் ரூம்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

சிங்கப்பூரில் அதிகரிக்கும் முன்பதிவு!! ஹோட்டல் ரூம்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?

அடுத்து வரும் மாதங்களில் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவுகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடைபெற உள்ள மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அதற்கு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.

மேலும் நடைபெற உள்ள பிரபலமான நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்றும், அவர்களை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.

21 Carpenter ஹோட்டல் கிளார்க் கீ பகுதிக்கு அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அது புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் ஒன்று.

அதன் பெரும்பாலான விருந்தினர்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர்கள்.

ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த ஹோட்டல் ரூம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த கோடை விடுமுறை காலத்தில் வியாபாரம் அதிகரித்துள்ளது.அது சுமார் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் தேவை சுமார் 30 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஹோட்டல் தெரிவித்தது.

மேலும் F1 கார் ரேஸ் போன்ற பெரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

நவம்பர் மாதம் பிரிட்டிஷ் பாப் இசை நட்சத்திரம் Dua Lipa இசை நிகழ்ச்சி நடைபெறும்.

ஒரு சில மாநாடுகளும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

வரவுள்ள இத்தகைய நிகழ்வுகளால் வருகையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.