எஃகு கம்பிகளில் குத்திய பேருந்து!! அலறிய பயணிகள்!!

எஃகு கம்பிகளில் குத்திய பேருந்து!! அலறிய பயணிகள்!!

சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியாவுக்கு அருகே ஓபிர் சாலையில் பயங்கர விபத்து நடந்தது. இந்த விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர்.

ரோச்சர் சாலையை நோக்கி செல்லும் Tower transit – இன் பேருந்து எண் 857 க்கும் லாரிக்கும் இடையே விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 39 மற்றும் 93 வயதுக்குட்பட்ட 4 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் சாலையில் 54 வயதுடைய பாதசாரிக்கும் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. லாரியில் இருந்த எஃகு கம்பிகள் குப்பைகள் போல் கொட்டி கிடந்ததை அந்த வீடியோவில் காணலாம்.மேலும் எஃகு கம்பிகளில் பேருந்து குத்துவதையும் காணலாம்.

இச்சம்பவத்தினால் சாலை மூடப்பட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தினர்களைத் தொடர்பு கொண்டு உதவுவதாக Tower Transit நிறுவனம் கூறியது.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடந்த சாலையின் ஒரு பகுதி சிறிது நேரம் மூடப்பட்டதையடுத்து, மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

சாலை மூடப்பட்டதால் பேருந்து எண் 980 மற்றும் 857 இரண்டும் அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக Tower Transit நிறுவனம் கூறியது.