கிலோ கணக்கில் கஞ்சா!! கைது செய்ய முற்பட்ட போது அதிகாரிகளுக்கு காயம்!!

கிலோ கணக்கில் கஞ்சா!! கைது செய்ய முற்பட்ட போது அதிகாரிகளுக்கு காயம்!!

சிங்கப்பூர் மத்தியப் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சுமார் 1200 போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஒரு வாரத்திற்கு சப்ளை செய்யும் அளவிற்கு போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜூன் 4-ஆம் தேதி Choa Chu Kang ஸ்ட்ரீட் 51 – இல் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் கார் பார்க்கிங்கில் அதிகாரிகள் கார் ஒன்றை சோதனையிட்டனர்.

சோதனை நடவடிக்கையில் 38 வயதுடைய கார் டிரைவரையும்,27 வயதுடைய பெண்ணையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இருவர்களும் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் அவர்கள் கைது செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதிகாரிகள் சற்று சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைது நடவடிக்கையின் பொது இரண்டு அதிகாரிகளுக்கு காயங்கள் ஏற்பட்டன.

அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு 692,000 வெள்ளி.

மேலும் சந்தேக நபர்களிடம் விசாரனை நடந்து வருகிறது.