கடனாளியை மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் பெண் கைது!!

கடனாளியை மிரட்டியதாக சந்தேகிக்கப்படும் பெண் கைது!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடனை திருப்பி கேட்டு துன்புறுத்தியதாக 37 வயது மதிப்பு தக்க பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஜூன் 2-ஆம் தேதி மாலை 6 மணியளவில் போலீசாருக்கு தகவல் வந்ததாக தெரிவித்தது.

சந்தேகிக்கப்படும் நபர் தோ பாயோ நார்த்தில் உள்ள ஒரு வீட்டின் நுழைவு வாயிலுக்கு வெளியே வர்ணம் பூசி எச்சரிக்கை குறிப்பை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகள் விசாரணை மூலமாகவும், கண்காணிப்பு கேமரா உதவியுடனும் சந்தேகிக்கப்படும் நபரை ஜூன் 3 அன்று கைது செய்தது.

மேலும் அப்பெண் கடன் மிரட்டல் விடுத்து சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக படும் நபர் ஜூன் 5 ல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு $5000 வெள்ளி முதல் $50000 வெள்ளி வரை அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.