சிங்கப்பூரின் தங்க மங்கைக்கு விளையாட்டு வீராங்கனை விருது!!

சிங்கப்பூரின் தங்க மங்கைக்கு விளையாட்டு வீராங்கனை விருது!!

சிங்கப்பூர்: இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீராங்கனை விருதானது சிங்கப்பூரின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் சாந்தி பெரோராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர் முதல்முறை இவ்விருதினை பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்.

சிங்கப்பூரின் தங்க மங்கை சாந்தி பெரேரா மற்றும் நீர் விளையாட்டு வீரர் மெக்சிமிலியன் மேடெர் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூர் விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சியானது ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

மெக்சிமிலியன் மேடெர்க்கு இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீரர் விருது கிடைத்திருக்கிறது.


இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறார்.

மகளிர் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருதை வூஷூ வீராங்கனை ஸூயன் லாவ் வென்றார்.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவுடன் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்தது.