மூன்றாவது குழந்தைக்கு தந்தையான குஷியில் நடிகர் சிவகார்த்திகேயன்…

மூன்றாவது குழந்தைக்கு தந்தையான குஷியில் நடிகர் சிவகார்த்திகேயன்...

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு? சீசன் 2 வின்’ கலக்கல் சாம்பியன்’ ஆக தன் பயணத்தை தொடர்ந்தவர். பின்பு கனா காணும் காலங்கள் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். சூப்பர் சிங்கர் ஜூனியர் தொகுப்பாளராகவும் இருந்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்த நடிகர்களில் இவரும் ஒருவர்.இவரின் எதார்த்த குணத்திற்காகவே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.

முதன்முதலாக இயக்குனர் பாண்டியராஜ் ‘மெரினா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பளித்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல், ரஜினி முருகன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன் -ஆர்த்தி அவர்களின் திருமணம் 2010 ல் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன்,ஆர்த்தி ஆகியோர் இருவரும் தனது மகள் ஆராதனாவுடன் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் பார்க்கும் போது கர்ப்பமாக இருப்பது போல் தெரிந்தது. அவர் கர்ப்பமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 2) இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் இரண்டு குழந்தைகளுக்கு நீங்கள் கொடுத்த ஆசியும்,அன்பையும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம் என்று கேட்டுக் கொண்டார்.ஆர்த்தியும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக கூறினார்.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மறைந்த ராணுவ வீரர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.
கதாநாயகியாக சாய் பல்லவி நடிப்பதாகவும், படத்தின் டீசர் வெளியாகி, இதுவரை 25 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடத்தி வந்தார். ஆனால் அமரன் படத்தில் அதற்கு மாறாக அதிரடி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். ராணுவ வீரரை போன்று உடல் கட்டமைப்பை பெறுவதற்கு அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்திருக்கிறார்.இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டது. சில காட்சிகள் மட்டும் சென்னை கேரளா உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.