வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய சிங்கப்பூர் பெண்!! பாராட்டிய நெட்டிசன்கள்!!

வெளிநாட்டு ஊழியருக்கு உதவிய சிங்கப்பூர் பெண்!! பாராட்டிய நெட்டிசன்கள்!!

சிங்கப்பூர்: சுட்டெரிக்கும் வெயில் பல்வேறு இடங்களில் கொழுந்து விட்டிருக்க…கடும் வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியருக்கு சிங்கப்பூர் பெண் ஒருவர் உதவிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெண் இயற்கையாகவே உதவும் உள்ளம் கொண்டவர் என்றும் தன் வீட்டிற்கு அருகில் வேலை செய்பவர்களை பார்த்தால் உணவு வாங்கி தருவாராம்.

இந்நிலையில் அந்தப் பெண் கடும் வெயிலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் அஸ்ராபுல் என்பவருக்கு அழகாக பழங்களை வெட்டி தட்டில் வைத்துக் கொடுத்துள்ளார். மேலும் வெப்பத்தை தணிக்க அதில் ஐஸையும் போட்டு தந்துள்ளார்.

அதைக் கண்ட வெளிநாட்டு ஊழியர் அளவுகடந்த மகிழ்ச்சியில் திகைத்துப் போனார்.

இதனை அஸ்ராபுல் என்பவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் சிங்கப்பூரர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள்’. இங்கு நான் தங்குவதில் பெருமைப்படுகிறேன்.

“வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் சிங்கப்பூர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த காணொளியை 1,00000 க்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

இதை கண்ட நெட்டிசன்கள் சிலர்… இந்த’ மனசு தாண்டா கடவுள்’ என்று அவரை புகழ்ந்தும், சிலர் பாராட்டியும் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.