உலகெங்கிலும் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் முக்கிய தலைவர்கள்!! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

உலகெங்கிலும் இருந்து சிங்கப்பூருக்கு வருகை தரும் முக்கிய தலைவர்கள்!! பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஷங்கிரிலா கலந்துரையாடலுக்கு உலகத் தலைவர்கள் வருகை புரிவதால் சிங்கப்பூர் காவல்துறையானது பாதுகாப்பு நடைமுறைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

வரும் வார இறுதியில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையானது ஷங்கிரிலா ஹோட்டல்,தேசிய காட்சிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனையில் ஈடுபடும்.

மே 30 – ஆம் தேதியிலிருந்து வாகன ஓட்டிகள் சிங்கப்பூர் ஷங்கிரிலா ஹோட்டலை சுற்றியுள்ள சாலையை தவிர்க்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியில் விமான செயல்பாடுகளுக்கும், சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் உரிமை பெற்றிடாத ஆளில்லாத வானூர்திகள் போன்றவை பறப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.