காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!!

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!!

சென்னை: ஐபிஎல் T20 2024இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடந்தது.

இறுதியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது.

ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன் தனது அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான முகபாவனையை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்துள்ளார்.

ஆனால் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

தோல்வியை தாங்க முடியாமல் மைதானத்திலேயே அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

காவியா மாறன் அழுத வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதை கண்ட ரசிகர்கள் அவர் அழுவதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது என்றும் ஆறுதல் தெரிவித்தும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறனுக்கு பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் ஆறுதல் கூறியுள்ளார்.மேலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் கூறினார்.

அவர் வெளியிட்ட பதிவில், ஹைதராபாத் அணியின் தோல்வியானது ஏமாற்றத்தை அளித்தது. அவர் மைதானத்திலேயே அழுதது மிகவும் வருத்தமளிப்பதாகவும்,கேமராக்களில் இருந்து தன் முகத்தை மறைத்துக் கொண்டதையும் கூறினார்.

பரவாயில்லை.. நாளை இருக்கிறது மை டியர்.. கவலைப்பட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.