நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!!

நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான தலைப்புடன் மக்களின் எதார்த்த கருத்தை முன் வைப்பதில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் நீயா நானாவில் மே 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சீரியல் நடிகை ஃபரினா கலந்து கொண்டுள்ளார்.அதுபோல இந்த வாரத்தின் தலைப்பு கர்ப்ப கால போட்டோ ஷூட்டை விரும்புபவர்களும் அதை விமர்சிப்பவர்களும் என்ற தலைப்பில் வெளியாக உள்ளது.

அது போல கடந்த வார நிகழ்ச்சியின் தலைப்பும் விறுவிறுப்பாக இருந்தது. பாரம்பரிய தங்க நகைகளை அணிய விரும்புவோர் ஓர் அணியும் நகையை விரும்பாத பெண்கள் மற்றொரு அணியினரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் தனது மாமியார் நெக்லஸை அணிந்து வந்துள்ளார். அது தன் மாமியார் 1950 இல் வாங்கியதாகவும் அப்போது ஒன்றரை பவுன் தங்கம் வெறும் 157 ரூபாய் தான் என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.சிலர் தாங்கள் அணிந்து வந்த நகையை 50 ஆண்டுகளுக்கு முன் வாங்கியது என்று கூறினார்.அதில் சிலர் தனது பாட்டி, கொள்ளு பாட்டி நகைகளையும் விரும்பி அணிந்து வந்திருப்பதை காட்டினர். இது போன்ற பழங்கால நகைகளை கண்ட சிலர் வியப்பில் ஆழ்ந்தனர். அப்போது எதிரணியினர் இம்மாதிரியான விலை உயர்ந்த நகைகளை வாங்கி வைத்து அதைப் பாதுகாப்பதே ஒரு வேலையாக வைத்திருக்க வேண்டும் என்றும், தாங்கள் எளிய நகைகளை அணிவதையே விரும்புகிறோம் என்று கூறினர்.

அது போன்று இந்த வாரம் கர்ப்ப காலத்தில் போட்டோ சூட் எடுத்து கொண்டாடுபவர்களும் அதை விமர்சிப்பவர்களும் என்ற தலைப்பில் கலந்து கொள்கின்றனர். இதில் கர்ப்ப காலத்தில் தாங்கள் எடுக்கும் போட்டோவை ஆல்பமாக பாதுகாத்து அதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரசித்து பார்ப்பதாகவும் தெரிவித்தனர். அதற்கு எதிர் அணியினர் இவ்வளவு ஆடம்பர செலவுகள் செய்வதை தாங்கள் விரும்புவதில்லை என்றும் அப்பணத்தை குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமித்து வைத்தால் அது குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட ஃபரினா தன் கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்டால் பெருமளவில் வைரலானார். அவர் தன் கர்ப்ப காலத்தின் முதல் வாரத்தில் இருந்து கடைசி வாரம் வரை தன் வயிற்றை போட்டோ எடுத்து ரசித்ததாகவும், வித்தியாசமான முறையில் தன் வயிற்றை காஸ்டிங் செய்து அழகு பார்த்ததாகவும் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தார். அதற்கு எதிர் அணியில் இருந்த பெண் ஒருவர் கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை யார் பார்க்க வேண்டும்? என்று கூறினார். அதற்கு அவர் நான் தான் என்று பதிலளித்தார்.அதற்கு அந்தப் பெண் நீங்களே உங்கள் வயிற்றை புகைப்படம் எடுத்து பார்க்க வேண்டியது தானே.. எதற்கு சமூக வலைதளங்களில் பகிர்கிறீர்கள்.. என்று கேள்வி எழுப்பினார். இந்த ப்ரோமோவானது தற்போது வெளியாகி அதிக அளவில்
விமர்சனம் பெற்று வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் ஃபரினாவை விஜய் டிவி எப்படி கோர்த்து வைத்துள்ளது பாருங்கள்.. நிஜமாவே நீ நடிகன்டா… என கொளுத்தி போட்டுள்ளனர்.