சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ள கஜகஸ்தான் அதிபர்!!

சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ள கஜகஸ்தான் அதிபர்!!

கஜகஸ்தான் அதிபர் Kassym-Jomart Tokayev அவர்கள் சிங்கப்பூருக்கு இரண்டு நாட்கள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.இன்று(மே 23) சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ளார்.

அவர் அதிபராக பதவியேற்று சிங்கப்பூருக்கு வருகைப் புரிவது
இதுவே முதல்முறை.

இருநாட்டுக்கும் இடையே 6 ஒத்துழைப்பு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

அவருக்கு இஸ்தானாவில் சம்பிரதாய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம் அவர்களுடன் சந்திப்பு நிகழ்வும் நடந்தது.

மேலும் அவருக்கு அரசு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவர்களையும் சந்திக்கவுள்ளார்.

கையெழுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இடையே நீண்ட கால பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.