மனைவியுடன் விடுமுறையைக் கொண்டாட நினைத்த முதியவருக்கு கடைசி தருணமாக மாறிய சோகம்!!

மனைவியுடன் விடுமுறையைக் கொண்டாட நினைத்த முதியவருக்கு கடைசி தருணமாக மாறிய சோகம்!!

சிங்கப்பூர் மே 21-ஆம் தேதி அன்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மோசமாக ஆட்டம் கண்டது.

இச்சம்பவத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப்ரி கிச்சன்(73) என்பவர் உயிரிழந்தார்.

அவருடைய மனைவியுடன் 6 வார விடுமுறையைக் கொண்டாடுவதற்காக பயணத்தை மேற்கொண்டார்.

லண்டனிலிருந்து புறப்பட்ட 10 மணி நேரத்திற்கு பின் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஆட்டம் கண்டது.

விமானம் திடீரென மேல் நோக்கி சென்றதாகவும் பின் கீழே இறங்கியதாகவும், விமானம் மோசமாக குலுங்கியதாகவும் கூறப்பட்டது.

மேலும் சீட் பெல்ட் அணியாதவர்கள் மேலே இருந்த பெட்டிகள் வைக்கும் இடத்தில் மோதி கொண்டனர். இதனால் பலர் காயமடைந்தனர்.


பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஜெஃப்ரி கிச்சனுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர் மியூசிக்கல் தியேட்டர் குழுவை வழி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.