திடீரென குறுக்கே வந்த அதிகாரியால் தடுப்புச் சுவரில் மோதிய பேருந்து!! கண் இமைக்கும் நொடியில் நடந்த விபத்து!!

திடீரென குறுக்கே வந்த அதிகாரியால் தடுப்புச் சுவரில் மோதிய பேருந்து!! கண் இமைக்கும் நொடியில் நடந்த விபத்து!!

மே 21 அன்று, சாங்கி விமான நிலைய முனையம் 3 இல் பேருந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.

நண்பகல் 12:40 மணியளவில் பேருந்து சேவை 858 பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

பேருந்து கடந்து செல்வதற்காக ஒரு பாதுகாப்பு தடை நீக்கப்பட்டது.ஒரு Certis Officer திடீரென வந்ததால் விபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மதியம் 12:45 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.சுமார் 20 பேரை மூன்று மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்தது.

பத்து பேர் செங்காங் பொது மருத்துவமனைக்கும், ஒன்பது பேர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கும், ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.

குறுக்கே வந்த Certis Officer – ஐ பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.