தலைவன்… தலைவன் தான்பா…சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி….

தலைவன்... தலைவன் தான்பா...சிஎஸ்கே ரசிகர்களால் கொண்டாடப்படும் தோனி....

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மே 18 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.இதில் சிஎஸ்கே அணியும்,ஆர்சிபி அணியும் மோதிக்கொண்டன.சிஎஸ்கே அணியானது 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தபோது மிகக் குறைந்த ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியானது வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாடிய வீரர்கள் தங்கள் வெற்றியின் சந்தோசத்தில் கொண்டாடி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணிக்கு கை கொடுப்பதற்காக காத்திருந்த தோனியை கண்டுகொள்ளாமல் அவர்களின் வெற்றியை கொண்டாடிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில் அவர் வழியில் நின்று கொண்டிருந்த ஆர்சிபி பணியாளர்களுக்கு மட்டும் கை கொடுத்தார். பின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய போது விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ரசிகர்களால் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு அது வைரலாகியுள்ளது.கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.அப்போது எம்எஸ் தோனி அவர்கள் குஜராத் அணி வீரர்களுக்கு கை கொடுத்து விட்டு வெற்றியை கொண்டாடலாம் என்று கூறி அணியை அழைத்துச் சென்றார்.அதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் இதுதான் ஆர்சிபிக்கும், சிஎஸ்கேவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன இருந்தாலும் தலைவன்!! தலைவன்!!தாம்பா!!என்று தோனியை ரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகின்றனர்.