சாமுராய் வாள்,போதைப் பொருள் உள்ளிட்டவைகளை காரில் வைத்திருந்த நபர்!! துரத்தி சென்று பிடித்த சிங்கப்பூர் காவல்துறை!!

சாமுராய் வாள்,போதைப் பொருள் உள்ளிட்டவைகளை காரில் வைத்திருந்த நபர்!! துரத்தி சென்று பிடித்த சிங்கப்பூர் காவல்துறை!!

சிங்கப்பூரில் அல்ஜூனிட் சாலையில் காலை 11.30 மணி அளவில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். வழக்கமான சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஒரு காரை தற்செயலாக நிறுத்தினர்.

அந்த காரில் இருந்தவருக்கு வயது 22. அவருடைய காரில் ஒரு கருப்பு சாமுராய் வாள், போதைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருள் சாதனங்கள் இருப்பது தெரிய வந்தது.

அவர் போலீசாரிடம் முன்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதாக கூறிவிட்டு பிறகு வேகமாக சென்று சாலை சந்திப்பில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

காவல்துறை அதிகாரி அவரை துரத்தினார்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அவருடைய காரை நோக்கி சென்றார்.அவருடைய காரின் கதவை மூடுவதற்கு முன் அவர் பிடிபட்டார்.

மேலும் அந்த நபர் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும், தனிப்பட்ட முறையில் மோசடி செய்ததாலும், போக்குவரத்து தொடர்பான குற்றங்களுக்காகவும்,மேலும் போதைப் பொருள் உள்ளிட்ட குற்றங்களுக்காக அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.