தாறுமாறாக சென்று மொய்கா ஆற்றில் விழுந்த பேருந்து!! 7 பேர் பலியான சோகம்!!

தாறுமாறாக சென்று மொய்கா ஆற்றில் விழுந்த பேருந்து!! 7 பேர் பலியான சோகம்!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த மே 10ஆம் தேதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சுமார் 20 பேருடன் சென்ற பேருந்து ஒன்று வரலாற்று சிறப்புமிக்க நகர மையத்தில் உள்ள மொய்கா ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த கொடூர சம்பவம் 7 பேரின் உயிரை பறித்தது.

டைவர்ஸ் உள்ளிட்ட மீட்புக் குழுவினர்களின் கடுமையாக உழைப்பின் மூலம் பேருந்து தண்ணீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிய தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

பேருந்து ஒன்று சாலையில் தாறுமாறாக வளைந்து கார் மீது மோதி பின்னர் மொய்கா ஆற்றில் விழுவதை காணலாம்.