கொளுந்து விட்டு எரிந்த தீ!! தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்!!

கொளுந்து விட்டு எரிந்த தீ!! தீயை அணைக்க போராடிய தீயணைப்பு வீரர்கள்!!

சிங்கப்பூரில் தோ பாயோ தொழிற்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றிய இடம் சுமார் நான்கு கூடைப்பந்து விளையாட்டு மைதானங்களுக்கு ஈடானது.

ஒரு கார்ப் பட்டறை,தொழிற்பேட்டை பட்டறை தீக்கு இரையானதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு சுமார் 9.40 மணியளவில் இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

இந்த கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைப்பதற்கு ஆறு நீர் ஜெட் விமானங்கள் மற்றும் ஆளில்லா தீயணைப்பு வண்டி ஈடுபடுத்தப்பட்டது.

தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆனதாக தெரிவிக்கப்பட்டது.

15 ஆம்புலன்ஸ்களும், சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர் என்று SCDF கூறியது.

அதில் ஒரு தீயணைப்பு வீரருக்கு கால்களில் பிடிப்பு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரைப் பரிசோதித்த டாக்டர் மேல் சிகிச்சை தேவையில்லை என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.


பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகே உள்ளவர்கள் சம்பவ இடத்தை சுற்றி இருந்தனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து அவர்களை விலகி இருக்குமாறு காவல்துறை தெரிவித்தது.