சிங்கப்பூரில் தீயில் கருகிய லாரி!!

சிங்கப்பூரில் தீயில் கருகிய லாரி!!

சிங்கப்பூரில் உள்ள உட்லண்ட்ஸ் அவென்யூ 6-இல் மே 9-ஆம் தேதி அன்று லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு மாலை 6.45 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், லாரியில் பரவிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பொதுவாக, வாகனங்களில் தீ விபத்துகள் ஏற்பட அதிக வெப்பம் அல்லது மின்சாரம் போன்ற காரணங்களால் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இச்சம்பவம் குறித்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது.