ஆற்றில் கவிழ்ந்த பேருந்து!! 25 பேர் பலி!!

வடக்கு பெருவின் ஆண்டியன் மலைப்பகுதியில் ஏப்ரல் 28 மாலை அனைவரையும் சோகத்தில் மூழ்க வைத்த கோர விபத்து ஏற்பட்டது .

செலண்டினில் இருந்து சொரோச்சுகோவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த துயர சம்பவத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலை கரடுமுரடாகவும், செப்பனிடப்படாமலும் இருந்ததால், மீட்புப் பணிகளைச் சவாலாக மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களுக்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என உள்ளூர் அரசு அறிவித்துள்ளது.