சிங்கப்பூர் பிரதமர், இந்தோனேசியா அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி!!

சிங்கப்பூர் பிரதமர், இந்தோனேஷியா அதிபர் இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு!!

சிங்கப்பூர் பிரதமர் லீ மற்றும் இந்தோனேஷியா அதிபர் ஜோக்கோ விடோடோ அவர்கள் இருவரின் சந்திப்பு மற்றும் விருந்து நிகழ்ச்சி நடைபெறும் என்று முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இருவரின் சந்திப்பும் மேற்கு ஜாவாவில் உள்ள போகோர் நகரில் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்றது.

செய்தியாளர் கூட்டத்தில் இருநாட்டு தலைவர்களின் வருடாந்திர சந்திப்பு குறித்து பேசினார்.

கடந்த பத்தாண்டுகளாக இருநாட்டு உறவுகளும் சிறப்பாக தொடர்ந்து நீடித்து வருவதை குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்காப்பு மற்றும் நிலைத்தன்மை முதலிய ஒப்பந்தங்களாகும்.