இரண்டு கார்கள் மோதி விபத்து!! தலைக்குப்பற கவிழ்ந்த டொயோட்டா கார்!!

இரண்டு கார்கள் மோதி விபத்து!! தலைக்குப்பற கவிழ்ந்த டொயோட்டா கார்!!

ஏப்ரல் 19 அன்று கிளார்க் குவே சென்ட்ரல் அருகே கார் கவிழ்ந்து விபத்து. இச்சம்பவம் தொடர்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 43 வயது நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் Eu Tong Sen தெருவில் இரவு 8 மணியளவில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளானது.

ஒரு வெள்ளை நிற டொயோட்டா கார் தலைகீழாக கவிழ்ந்தது. மற்றொன்று, நீல நிற கார், அதன் முன் இடது பக்கத்தில் சேதமடைந்தது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தில் மூன்று பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.