ஸ்பெயினில் காணாமல் போன சிங்கப்பூர் பெண்மணி!! வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!

ஸ்பெயினில் காணாமல் போன சிங்கப்பூர் பெண்மணி!! வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட சடலம்!!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஸ்பெயினில் ஆட்ரிப் பாங் டிரோவ் என்ற சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் காணாமல் போனதாக செய்தி வெளிவந்தது. காணாமல் போனவரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 10-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் காணாமல் போன சிங்கப்பூர் பெண்மணியின் உடல் என்பது ஏப்ரல் 17-ஆம் தேதி தெரிய வந்தது.

.ஏப்ரல் 10-ஆம் தேதியன்று முர்சியா வட்டாரத்தில் உள்ள முனிசிபாலிட்டியான அபானிலாவில் உள்ள லாரி நிறுத்ததில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அச்சமயத்தில் காணாமல் போன சிங்கப்பூர் பெண்மணி என்று தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அவருடைய உடல் அவர் தங்கிருந்த ஹோட்டலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய உடலில் சுமார் 30 க்கும் அதிகமான கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன.

இச்சம்பவம் குறித்து ஸ்பெயின் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அந்த பெண்ணின் கொலைக்கு காரணமான அவருடைய நண்பரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.அந்த நபர் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவிக்கப்பட்டது.

அந்த நபர் “Blade Weapon” எனும் ஆயுதத்தால் சிங்கப்பூர் பெண்மணியை தாக்கி கொலை செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.