மே தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் ஓர் புதிய அறிவிப்பு!!

மே தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரில் ஓர் புதிய அறிவிப்பு!!

மே தினத்தை முன்னிட்டு SMRT, SBS Transit நிறுவனங்கள் புதிய அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.

அதன் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான நேரத்தை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இது ஏப்ரல் 30-ஆம் தேதியன்று நடைமுறையில் இருக்கும்.

மே தினத்திற்கு முன்தினமான ஏப்ரல் 30-ஆம் தேதியன்று 22 பேருந்துகளின் சேவை நேரம் நீட்டிக்கப்படும். இதனை SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில் சேவை பாதைகளான வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்கு பாதை, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை ஆகியவற்றில் நள்ளிரவுக்கு பிறகு நேரம் நீட்டிக்கப்படும். இந்த தகவலை SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.