பல நாள் கழித்து காவல்துறையிடம் சிக்கிய பெண்!!

பல நாள் கழித்து காவல்துறையிடம் சிக்கிய பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் உள்ள கடைகளில் விலை உயர்ந்த பொருட்களை திருடியதற்காக 38 வயது பெண் ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

சுமார் $800 க்கும் அதிகமான மதிப்புள்ள பெல்ட், கிட்டத்தட்ட $200 மதிப்பிலான அழகுசாதனப் பொருட்களையும் அந்த பெண் திருடியதாக கூறப்படுகிறது.

அந்த பெண்மணி ஏப்ரல் மாதம் சிங்கப்பூர் திரும்பியபோது பிடிபட்டதாக காவல்துறை தெரிவித்தது.

அவர் கைது செய்யப்பட்ட அதே நாளில் $400 க்கும் அதிக மதிப்பிலான அழகுசாதனப் பொருட்களை திருடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.