மனைவியை கொல்வதற்காக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்!! தேடி வந்த காவல்துறை!! பிடிப்பட்டது எப்படி??

மனைவியை கொல்வதற்காக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்!! தேடி வந்த காவல்துறை!! பிடிப்பட்டது எப்படி??

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய நபரை காவல்துறை கைது செய்தது.

ஏப்ரல் 14ஆம் தேதி அன்று சந்தேக நபர் விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார்.

இச்சம்பவம் தீவிரவாதத்திற்கு தொடர்பு இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்திற்கான நோக்கமும் கண்டறியப்பட்டது. அந்த நபர் அவரது மனைவியை சுட்டுக் கொல்வதற்காக இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதாக காவல்துறை கூறியது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது அங்கிருந்த மெய்க்காவலருக்கு காயம் ஏற்பட்டது.

சந்தேக நபர் அங்கிருந்து தப்பி சென்றார். காவல்துறை அவரை தேடி வந்த நிலையில்  ஏப்ரல் 15-ஆம் தேதி பிடிப்பட்டார்.

அவரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு விடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.