போலீஸ் காரும், ஒரு காரும் மோதி விபத்து!! பெண் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை!!

போலீஸ் காரும், ஒரு காரும் மோதி விபத்து!! பெண் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை!!

சிங்கப்பூரில் தெம்பனிஸ் நார்த் டிரைவ் 2 மற்றும் தெம்பனிஸ் நார்த் டிரைவ் 1 க்கும் இடையிலான சந்திப்பில் போலீஸ் காரும், கருப்பு நிற ஒரு காரும் மோதி விபத்து ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

இச்சம்பவம் ஏப்ரல் 12-ஆம் தேதி (நேற்று) காலை நடந்தது.

இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினருக்கு காலை 10.35 மணியளவில் அழைப்பு வந்ததாக தெரிவித்தது.

காவல்துறை வாகனத்தை 20 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி இயக்கியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் 48 வயதுடைய பெண் சாங்கி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் பொழுது அவர் சுயநினைவுடன் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கூறியது.