மோசமான வானிலை!! உயிர் பிழைத்த 22 பேர்!! காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது மீட்கப்பட்ட மற்றுமொரு 37 பேர்!!

மோசமான வானிலை!! உயிர் பிழைத்த 22 பேர்!! காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது மீட்கப்பட்ட மற்றுமொரு 37 பேர்!!

மத்திய தரைக்கடலில் மோசமான வானிலையின் காரணமாக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 15 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

அதே நாளில் மற்றுமொரு தேடுதல் நடவடிக்கையில் 37 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டதாக கடலோரக் காவல் படையினர் தெரிவித்தனர்.