தங்குமிடம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

தங்குமிடம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது பனிச்சறுக்கு வீரர்களுக்கு நேர்ந்த விபரீதம்!!

ஆஸ்திரியாவின் சோல்டன் ரிசார்ட் நகருக்கு அருகே பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பனிச்சறுக்கு வீரர்கள்
இந்த பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த அந்த நபர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர்கள் தங்குமிடம் நோக்கி மலை மீது ஏறும் போது ​​பனிச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் 17 பேர் கொண்ட சுற்றுலாக் குழுவின் ஒரு பகுதியினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.