சிங்கப்பூரில் கடன் தொல்லை தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்!!

சிங்கப்பூரில் கடன் தொல்லை வழக்கு தொடர்பாக 17 வயதான இளைஞர்கள் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் சோவா சூ காங் தெரு 62 இல் உள்ள ஒரு குடியிருப்பில் ஏப்ரல் 9 ஆம் தேதி அன்று நடந்தது

. வீட்டின் முன் கதவு சைக்கிள் பூட்டினால் பூட்டப்பட்டதாகவும், கதவின் மீது சிவப்பு பெயிண்ட் தெளிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் $5,000 முதல் $50,000 வரை அபராதமும், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஆறு பிரம்படிகள் வழங்கப்படலாம்.

கடன் தொல்லை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.