புனித ஸ்தலத்திற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

தென்மேற்கு பாகிஸ்தானில் மத யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த துயரச் சம்பவம் ஏப்ரல் 10ஆம் தேதி அன்று நேர்ந்தது.

இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். அதிவேகமாக இயக்கப்பட்ட அந்த டிரக் ஹப் சிட்டி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பக்தர்கள் புனித ஸ்தலத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.