பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!!

பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்!!

பிலிப்பைன்ஸில் பயிற்சியின் போது ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த துயர சம்பவத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த இரண்டு கடற்படை விமானிகள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 11ஆம் தேதி (இன்று) நடந்தது.

ஹெலிகாப்டர் அவசர அவசரமாக மணிலாவுக்கு தெற்கே உள்ள சந்தைக்கு அருகே தரையிறக்கப்பட்டது.

விமானிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.