நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவர்!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!!

நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவர்!! சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்!!

சிங்கப்பூரின் Tampines குடியிருப்பில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் 73 வயதான முதியவர் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று காலை நடந்தது.

இந்த சம்பவம் குறித்து காலை 10.30 மணி அளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

நீச்சல் குளத்தில் சுயநினைவின்றி இருந்த அந்த முதியவரை அவர்கள் மீட்டனர்.

பிறகு அந்த முதியவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.