புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!!

புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

அந்த விமானம் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு சிங்கப்பூரில் மாலை 5.30 மணிக்கு தரையிறங்க வேண்டியது.

ஆனால் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிற்பகல் 12.42 மணிக்கு மீண்டும் சிட்னி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானம் சிட்னியில் இருந்து 4.19 மணிக்கு புறப்பட்டு இரவு 10.24 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.