நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!!

நியூயார்க்கில் நிலநடுக்கம்!! மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை!!

நியூயார்க்கில் ஏப்ரல் ஐந்தாம் தேதியன்று காலை 10.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது.

இதுவரை காயங்கள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை 11 மணியளவில் நியூயார்க்கில் வசிக்கும் மக்களின் தொலைபேசிகளுக்கு நிலநடுக்கம் குறித்து அவசர எச்சரிக்கை அனுப்பப்பட்டது.

மேலும் பொதுமக்களை பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே 911ஐ தொடர்பு கொள்ளுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.