தெற்கு தாய்லாந்து படகில் தீ விபத்தில் சிக்கிய பயணிகள், ஊழியர்கள்!!

தெற்கு தாய்லாந்தில் சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஏப்ரல் 4ஆம் தேதி அன்று காலை 6.40 மணியளவில் நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

சூரத் தானி மாகாணத்தில் இருந்து பிரபல சுற்றுலாத் தீவான கோ தாவோவிற்கு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், படகுகள் மூலம் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.